Vasantham FM

வசந்தம் எஃப்.எம் (Vasantham FM) இலங்கையில் பண்பலையில் இயங்கும் தமிழ் வானொலி நிலையம் ஆகும். "தமிழின் சுவாசம்" எனும் மகுட வாசகத்தோடு 2008 ஏப்பிரல் மாதம் 21 ஆம் நாளில் இருந்து இலங்கை அரசின் கீழ் இயங்கும் சுயாதீன ஊடக வலையமைப்பின் (ITN) ஊடாக ஒலிபரப்பாகி வருகிறது. வசந்தம் வானொலி ஆரம்பத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமேயான பிராந்திய வானொலியாக 97.6 பண்பலைவரிசையில் தனது சேவையை ஆரம்பித்தது. பின்னர் 97.3 எனும் பண்பலைவரிசை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் ஒலிபரப்பாகி, இலங்கை முழுவதற்குமான சேவையை நடத்தியது. பின்னர் 2011 இல் 102.6, 102.8 ஆகிய பண்பலை வரிசைகளில் இலங்கை எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. இதனை விட இணையத்தின் ஊடாகவும் ஒலிபரப்பாகி வருகிறது.